இந்த முறை ஓர் எளிதான வெண்பா எழுதலாம்.
இது நான்கடிப் பாடல்.
இரண்டாமடியில் தனிச்சொல் வராது.
நான்கடிகளும் ஓர் எதுகை ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) பெற்றும் வரலாம்; முதல் இரண்டடிகள் ஓர் எதுகையுடனும், பின் இரண்டடிகள் வேறு எதுகையுடனும் வரலாம்.
வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
( நினைவுக்கு : காய் முன் நேர், மா முன் நிரை, விளம் மின் நேர்)
இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அமைந்த பாடலை இன்னிசை வெண்பா என்பர்.
எல்லாம் இழந்துவிட் டேதிலியாய் நிற்பவர்க்கு
நல்லோர் கொடையாக நல்கும் பொருள்களை
வல்லாண்மை யாக மறுத்துத் திருப்புகின்ற
பொல்லானே மண்மேடாய்ப் போ.
இந்தப்பாடல் புதுச்சேரிப் புலவர் அரங்க.நடராசனார் எழுதியது.
இப்பாடலில் நான்கடிகளும் ஓர் எதுகை ( 'ல்' ) அமைந்துள்ளது.
இப்போது, நீங்களும் உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த ஓர் இன்னிசை வெண்பா எழுதலாமே!