செவ்வாய், 28 ஜனவரி, 2014

பாடம்5 அடி!

பாடம்5 அடி!


சீர்கள் இரண்டு முதலாக இணைந்து -தொடர்ந்து நடப்பது அடி எனப்படும்.
அவ்வடி:-
1-குறளடி
2-சிந்தடி
3-அளவடி
4-நெடிலடி
5-கழிநெடிலடி –என 5வகைப்படும்.

இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி
நாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி
அறுசீர் முதலன கழிநெடி லடியே! -என்பது தொல்காப்பியம்!

நாம் கற்கும் வெண்பாவிற்கு அளவடியும் சிந்தடியும் போதுமானது என்பதால் அவற்றை மட்டும் பார்ப்போம்.

1-அளவடி -ஓர்அடியில் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி எனப்படும். இவ்வளவடி நேரடி எனவும் பெயர் பெறும்.

2-சிந்தடி -ஓர்அடியில் மூன்று சீர்களைப் பெற்று வருவது. இச்சிந்தடி (வெண்பாவில்) வெண்பாவின் ஈற்றடியாக மட்டுமே வரும்.

எ.காட்டு:-

பொன்னைப் பொருளைப் புகழை மதியாமல்
அன்னைத் தமிழை அகமேற்றார்! -முன்னம்
தமிழர் புரிந்த தவத்தால் கிடைத்த
அமிழ்தாம் கலைஞர் அறி!

வந்த மொழிக்கெல்லாம் வாய்வீட்டில் வாழ்வளித்தே
சொந்த மொழிமாளச் சம்மதித்தோம்! -இந்தநிலை
மாற வழிகண்டார் மன்னுபுகழ் மாக்கலைஞர்
சீராள் செம்மொழியாய்ச் செய்து! -அகரம்.அமுதா

இவ்விரு வெண்பாவின் முதல் மூன்று அடிகளும் அளவடியாக வந்தமை காண்க. ஈற்றடியாகிய நான்காம் அடி மூன்றே சீர்களைப் பெற்று சிந்தடியாக வந்தமையையும் காண்க.


குறிப்பு:-

முதல் மூன்றடிகளும் அளவடியாகவும் நான்காமடியாகிய ஈற்றடி சிந்தடியாகவும் வரும். இருவே அனைத்து வெண்பாவிற்கும் உள்ள பொது விதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக