செவ்வாய், 28 ஜனவரி, 2014

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2

எழுசீர் ஆசிரிய மண்டிலம்! 2


(முன்பு வழங்காமல் விடுபட்டுப் போன எழுசீர் ஆசிரிய மண்டிலம் 2 -ஐ இப்பகுதியில் காண்போம்)

1. அடிதோறும் ஏழு சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

2. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

3. 1 ஆம் 5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். அல்லது 1 ஆம் 7 ஆம் சீர்களில் மோனை அமையலாம்.

4. தேமா, புளிமா ஆகிய மாச்சீர்கள் இரண்டும், தேமாங்காய், புளிமாங்காய் ஆகிய மாங்காய்ச்சீர்கள் இரண்டும் மட்டுமே இப்பாவில் பெற்றுவரும். இதில் தேமாங்காய் அடியின் முதற்சீரில் மட்டுமே வரும். இடையில் எங்கும் வராது.

5. சீர்கள் முறையே—
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா + புளிமா

(அல்லது)

தேமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா + புளிமா

6. இவ்வகைப்பா முழுக்க முழுக்க வெண்டளையான் இயன்றது என்பதறிக.

7. 1ஆம் 3ஆம் 5ஆம் சீர்கள் ஈரசைச் சீர்களாகவும், மூவசைச்சீர்களாகவும் வரலாம். 2ஆம் 4ஆம் 6ஆம் 7ஆம் சீர்கள் கட்டாயம் இயற்சீர்களாகவே (தேமா, புளிமா) வர வேண்டும்.

8. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு. இல்லையாயினும் குறையில்லை.

காட்டுப் பாடல்கள்!

புன்சொற்கள் தந்த பகுவாய் அரக்கன்
உரைபொய் எனாது புலர்வாள்
ன்சொற் கடந்து மடமங்கை ஏவ
நிலைதேர வந்த ருளே
ன்சொற் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு னியே
ன்சொற் கடந்து மனமும் தளர்ந்த
ளவீரன் வந்த இயல்பே! --- கம்பரா…

பச்சை - மோனையைக் குறிக்கிறது.
மஞ்சல் - காய்ச்சீர்களைக் குறிக்கிறது.

அகரம் அமுதா

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.

அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,

எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.

எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.

1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.


விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா =இதுவே நாம் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாடு.

காட்டு-

வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே
வண்டமிழ் பேசிடும் மக்கள்
பையகம் நஞ்சைப் பதுக்கிடும் பாம்பாய்ப்
பண்பினில் சூழ்ச்சியை வைத்துப்
பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்
புகழ்நிலம் அற்றனர் இன்றோ
கையக நிலமும் காடையர் பரிக்கக்
கவினழிந் திடர்பல உற்றார்!

நாவலந் திவு நம்மவர் வாழ்ந்த
நன்னிலம் ‘இந்தியா’ ஆச்சு
தீவெனத் திகழும் இலங்கைநன் னாடும்
சிங்கள தேயமாய்ப் போச்சு
பாவளங் கொழித்த பசுந்தமிழ் ஆட்சி
பாரினில் எங்கனும் இல்லை
நாவலம் படைத்த நற்றமிழ் மக்கள்
நலிவகல் நாளு(ம்)வந் திடுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக